ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஆடியோ மற்றும் மிரட்டலான டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டானது. சமீபத்தில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 2014-ல் ‘மெரசலாயிட்டேன்’ என்ற டைட்டிலை ‘AR ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் பதிவு செய்திருந்ததால், ‘மெர்சல்’ எனும் தலைப்பை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
#Mersal#MersalDiwali Idhu Peyar Alla,Unarvu.Thadaigal Thaandi Varugiran #MersalArasan#NammaTitleNamake@MuraliRamasamy4@ThenandalFilmspic.twitter.com/197j40fryb
— Hema Rukmani (@Hemarukmani1) October 6, 2017
ஆதலால், சென்னை உயர்நீதி மன்றம் ‘மெர்சல்’ படத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) ‘மெர்சல்’ டீமுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.